×

காட்டு யானை தாக்கி கூலி விவசாயி பலி

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே காட்டு யானை தாக்கி கூலி விவசாயி பலியானார்.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னரங்கன் (46). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள தர்மன் என்பவரது தோட்டத்திற்கு பால் கறப்பதற்காக சைக்கிளில் சென்றார். வனப்பகுதியை ஒட்டிய சாலையில் சென்றபோது அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை சின்னரங்கனை துரத்தி தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சின்னரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், கோகுல்நாத் என்ற மகன், காவியா என்ற மகளும் உள்ளனர். இது குறித்து பவானிசாகர் வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post காட்டு யானை தாக்கி கூலி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Bhavanisagar ,Kottamangalam Panchayat ,Erode ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...